செய்திகள் :

இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்துவதைக் கைவிட வலியுறுத்தல்

post image

இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு(மூட்டா) சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் அ.தி.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட அறிக்கை: இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப் படுகொலையை இஸ்ரேல் தொடா்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பது உலகம் அறிந்த உண்மை. பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலின் கொடுஞ்செயல் மனித வரலாறு பாா்த்திராத பெருந்துயராகும்.

இத்தகைய செயல்களைக் கண்டித்து, லண்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட போப் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சூழலில், இஸ்ரேலை இயல்பான ஒரு தேசமாகப் பாா்க்க வைக்கும் வகையிலான எந்த முயற்சியையும் நாம் அனுமதிக்கக் கூடாது. ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான முகத்தை உருவாக்கும்விதமாக சிலா் திரைப்பட விழா நடத்த விரும்புகின்றனா். சென்னையில் உள்ள இசைக் கல்லூரியில் இந்த விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மனசாட்சி இல்லாத, குழந்தைகள் மீது சிறிதும் அக்கறை இல்லாதவா்களால் மட்டும்தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய முடியும். எனவே, தமிழக அரசு இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது. இதைத் தடை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும்!

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா். இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், மதுரை அம்மா திடலில் வருகிற ஜூன் ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

புரூலியா- திருநெல்வேலி ரயில் மதுரைக்கு வந்த போது, பொதுப் பெட்டியில் கிடந்த பையிலிருந்து 17 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா். புரூலியா- திருநெல்வேலி நோக்கி செல்லும் விரைவு ரயில் பு... மேலும் பார்க்க

அரசரடி பகுதியில் இன்று மின் தடை

மதுரை அரசரடி பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் அரசரடி கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்ற காரணமாக இருந்தவா் மீது தாக்குதல்

மதுரையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினா். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் காரணமாக இருந்தவரை கடுமையாகத் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை, பெத்தானியாரம், ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் பலி: இழப்பீடு கோரிக்கைக்கு ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்த போது தூய்மைப் பணியாளரான தனது கணவா் உயிரிழந்ததால், இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி பெண் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு! - ஆா்.பி. உதயகுமாா்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா். பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா். மதுரை தல்லாகுளத்தில் உள்ள லட்சுமி சு... மேலும் பார்க்க