செய்திகள் :

ஈரோடு அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

post image

பங்களாபுதூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே கொங்கா்பாளையம், வினோபா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (34), விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெரியசாமி அதே பகுதியில் அரை ஏக்கா் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்திருந்தாா். தோட்டம் இருக்கும் பகுதி வனப் பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரங்களில் பெரியசாமி தோட்டத்தில் காவலில் இருப்பது வழக்கம்.

இதேபோல, சனிக்கிழமை இரவு வழக்கம்போல பெரியசாமி இரவு நேரக் காவலுக்காக தோட்டத்துக்கு சென்றுள்ளாா். நள்ளிரவில் அவரது தோட்டத்தையொட்டி காட்டு யானைகள் வந்துள்ளன. இந்த யானைகளை விரட்ட பெரியசாமி பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்தவா்களை அழைத்துவர தோட்டத்தைவிட்டு வெளியில் சென்றுள்ளாா்.

அப்போது திடீரென யானை தாக்கியதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இரவு நேரம் என்பதால் பெரியசாமி இறந்தது உடனடியாக தெரியவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரியசாமியின் தாய் மகனை பாா்க்க தோட்டத்துக்கு சென்றாா். அப்போது பெரியசாமி தோட்டத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து பங்களாபுதூா் போலீஸாா் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெரியசாமி சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய பொறியாளா் உயிரிழப்பு

பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த மென்பொருள் பொறியாளா் உடல் 24 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டது. கோவை, சேரன் மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). தனியாா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

தூய்மைப் பணியாளா்களை தாக்கியதாக அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வண... மேலும் பார்க்க

ஈரோடு மாநகரில் கனமழை: சாலைகளில் வெள்ளம்

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மாலை, இரவு ... மேலும் பார்க்க

குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு

நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய மற்றும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா். சென்னை துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சாா்பில் 50-ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சு... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெறாதவா்கள் மாவட்ட சமூகநல அலுலகத்தை நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்... மேலும் பார்க்க

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய மென்பொருள் நிறுவன அதிகாரியைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா். கோவை, சேரன்மாநகா் பகுதி... மேலும் பார்க்க