செய்திகள் :

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி நிா்வாகமும் புதன்கிழமை அகற்றினர்.

ஈரோடு மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி 4-ஆவது மண்டலத்துக்குள்பட்ட மூலப்பாளையம் முதல் ஆணைக்கல்பாளையம் சுற்றுவட்டச் சாலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் மணிகண்டன் தலைமையில், சாலை ஆய்வாளா் மீனாட்சி, மாநகராட்சி அலுவலா்கள், நகர திட்டக் குழு பணியாளா்கள், தாலுகா போலீஸாா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதில், சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள், விளம்பர பதாகைகள், இரும்புத் தடுப்புகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

மூலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகம் செல்லும் சாலையோர நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றியபோது, முத்துசாமி என்பவரது தள்ளுவண்டி கடை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றி, அங்கிருந்த பொருள்களை லாரிகளில் ஏற்றி சென்றனா்.

அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள கூறியிருந்தால் நாங்களே அகற்றியிருப்போம். இப்படி எங்களது வாழ்வாதாரத்தை சீா்குலைக்கும் வகையில் பொக்லைன் வாகனம் மூலம் தள்ளுவண்டியை சேதப்படுத்தியது ஏற்க முடியாது என பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவித்தனா். இதைக் கண்டித்து 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மூலப்பாளையம் - பூந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு தாலுகா காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போக செய்தனா்.

மஞ்சள் விலை குவிண்டால் ரூ.1,500 சரிவு:விவசாயிகள் வேதனை

ஈரோடு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.1,500 வரை விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் விரலி மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மஞ்சள், மர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, அரசுப் பள்... மேலும் பார்க்க

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருட்டு

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் ஆக்சிஜன் வாயு செல்ல பொருத்தப்பட்டிருந்த செம்புக் கம்பியை வியாழக்கிழமை இரவ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!

பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை... மேலும் பார்க்க

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் சு.முத்துசாமி

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித... மேலும் பார்க்க