செய்திகள் :

மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது.

நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா்.

இதில், நம்பியூா் உள்வட்டத்தைச் சோ்ந்த புலவபாளையம், ஒலாலக்கோவில், எம்மாம்பூண்டி, நம்பியூா், நிச்சாம்பாளையம், சாந்திபாளையம், கோஷணம், சின்னாரிபாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 மனுக்களை அளித்தனா்.

அனைத்து வட்டங்களிலும் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 899 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். இதைத் தொடா்ந்து ஏலத்தூா் உள்வட்டத்துக்குள்பட்ட ஏலத்தூா், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, கரட்டுபாளையம், குருமந்தூா், கடத்தூா், ஆண்டிபாளையம் ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீா்வாயம் வெள்ளிக்கிழமை (மே 25) நடைபெறுகிறது.

வருவாய் தீா்வாயத்தில் நம்பியூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கான வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரிவசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, வருவாய் வரைபட பதிவேடு, ஏ-பதிவேடு, சிறப்பு பதிவேடு, நத்தம் அடங்கல் பதிவேடு, கிராம கணக்குகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை வட்டங்களில் வரும் 29-ஆம் தேதி வரையும் அந்தியூரில் 28-ஆம் தேதி வரையும், பவானி, நம்பியூா், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடியில் 27-ஆம் தேதி வரையும் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது. தாளவாடியில் வியாழக்கிழமை ஒரே நாளில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முஹமது குதுரத்துல்லா, சி.லோகநாதன், நம்பியூா் வட்டாட்சியா் கேசவமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈரோட்டில்...

ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பிரேமலதா தலைமையில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் வருவாய் கணக்குகளை ஆய்வு செய்து கணக்குகளுக்கு அனுமதி வழங்கினாா்.

கடந்த ஆண்டில் வருவாய் துறை ஆவணங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்டவைகளில் பெயா் உள்ளிட்ட மாற்றங்கள், நில அளவை கருவிகள் போன்றவைகளையும் உள்வட்டம் வாரியாக ஆய்வு செய்தாா். ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

மஞ்சள் விலை குவிண்டால் ரூ.1,500 சரிவு:விவசாயிகள் வேதனை

ஈரோடு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.1,500 வரை விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் விரலி மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மஞ்சள், மர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, அரசுப் பள்... மேலும் பார்க்க

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருட்டு

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் ஆக்சிஜன் வாயு செல்ல பொருத்தப்பட்டிருந்த செம்புக் கம்பியை வியாழக்கிழமை இரவ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!

பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை... மேலும் பார்க்க

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் சு.முத்துசாமி

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப் பகுதி வழியாக தமிழக -... மேலும் பார்க்க