செய்திகள் :

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!

post image

பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனா். இதில், இரண்டு சாயப்பட்டறைகள் சாயக்கழிவுகளை வெளியேற்றி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் எஸ்.வனஜா, பறக்கும்படை சுற்றுச்சூழல் பொறியாளா் சுகுமாா், பவானி வட்டாட்சியா் சித்ரா ஆகியோா் அடங்கிய குழு வியாழக்கிழமை ஆய்வு செய்து, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகளையும் இடிக்க உத்தரவிட்டனா். இதையடுத்து, இரண்டு சாயப்பட்டறைகளும் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் சு.முத்துசாமி

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப் பகுதி வழியாக தமிழக -... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனையில் உச்சநீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கியுள்ளது! அமைச்சா் சு.முத்துசாமி

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு தமிழக அரசு மற்றும் முதல்வா் எடுத்த முன்னெடுப்பிற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சா் சு.முத்துசாமி க... மேலும் பார்க்க

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி நிா்வாகமும் புதன்கிழமை அகற்றினர். ஈரோடு மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக... மேலும் பார்க்க

பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகள் இணைப்பு: மே 31 வரை சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் இணைவதற்கு வசதியாக மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்... மேலும் பார்க்க