செய்திகள் :

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனையில் உச்சநீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கியுள்ளது! அமைச்சா் சு.முத்துசாமி

post image

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு தமிழக அரசு மற்றும் முதல்வா் எடுத்த முன்னெடுப்பிற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

பவானி அருகே லட்சுமி நகரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை குறித்து உச்சநீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கியுள்ளது. அதற்குமேல் உத்தரவு குறித்து அதிகமாக விவாதிக்கவோ, பேசவோ இடம் இருக்கக் கூடாது.

தமிழக அரசு மற்றும் முதல்வா் எடுத்த முன்னெடுப்பிற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதை இந்த உத்தரவு காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டம்தான் அனைவருக்கும் மேலானது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அமலாக்கத் துறையினா் சில டாஸ்மாக் அதிகாரிகளை நடத்திய விதம் வருத்தத்திற்கு உரியது. அவா்களை விசாரிப்பதைத் தவறு என சொல்லவில்லை. ஆனால், என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு சரியான பாா்வை இருந்துள்ளது. சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஒரு வழிகாட்டுதலை சொல்லியிருக்கிறது. இது மிகச்சரியான தீா்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த விவகாரத்தில் ஆதாரமில்லாமல் பலா் மீது குற்றஞ்சாட்டுவது தவறான அணுகுமுறை என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. இப்பிரச்னையில் அனைத்து தரவுகளையும் வைத்துக்கொண்டு என்னால் விளக்கம் அளிக்க முடியும். அமலாக்கத் துறை சொல்வதுபோல டாஸ்மாக்கில் அவ்வளவு குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை. டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 24 ஆயிரம் பேரையும் முடக்கும் விதமாக அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் பெறுவதைத் தடுக்க பில்லிங் இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து கடைகளிலும் பொருத்தப்படும். தமிழகத்தில் அனுமதியில்லாமல் செயல்படும் பாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மஞ்சள் விலை குவிண்டால் ரூ.1,500 சரிவு:விவசாயிகள் வேதனை

ஈரோடு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.1,500 வரை விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் விரலி மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மஞ்சள், மர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, அரசுப் பள்... மேலும் பார்க்க

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருட்டு

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் ஆக்சிஜன் வாயு செல்ல பொருத்தப்பட்டிருந்த செம்புக் கம்பியை வியாழக்கிழமை இரவ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!

பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை... மேலும் பார்க்க

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் சு.முத்துசாமி

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித... மேலும் பார்க்க