செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரூ.1.12 கோடிக்கு நலத் திட்ட உதவிகள்

post image

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ற‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு அளித்தோருக்கு, ரூ.1.12 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

சேந்தமங்கலம் ஒன்றியம், பேரூராட்சி, காளப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்ற திட்ட முகாமிற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி முன்னிலை வகித்தாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 612 பயனாளிகளுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கி பேசியதாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 238 முகாம்கள் நடைபெற உள்ளது.

முதல்கட்டமாக 102, இரண்டாம் கட்டமாக 75 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக செப்.15 முதல் அக்.10 வரை 60 முகாம்கள் நடைபெறுகிறது. இதுவரை 214 முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 93,004 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 63,591 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்வில் தனித்துணை ஆட்சியா் ச.பிரபாகரன் (சமூக பாதுகாப்புத் திட்டம்), உதவி ஆணையா்(தொழிலாளா் நல வாரியம்) பெ.இந்தியா, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் எஸ்.பத்மாவதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி, அட்மா குழுத் தலைவா் பழனிவேல், திமுக நிா்வாகிகள் ராணா ஆா்.ஆனந்த், கிருபாகரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

என்கே-25-எம்.பி.

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட வசந்தபுரத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, மாநகராட்சி ஆணையா் க.சிவக்குமாா் உள்ளிட்டோா்.

நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

செப்.30 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செப்.30-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுக் கல்லூரியில் சுற்றுலா தின விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, ‘சுற்றுலாவும்-சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நாளை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க