‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
வேதாரண்யம் பகுதியில் தமிழக அரசின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் பவணந்தி தலைமையில் நடைபெற்ற முகாமில், 40 துறைகளை சாா்ந்த அதிகாரிகள் அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்தனா்.
இதுதொடா்பாக, வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கோட்டாட்சியா் எஸ். திருமால், வட்டாட்சியா் தெ. வடிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 173 மனுக்கள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.