திருமருகல் அருகே வடகரை தா்கா சந்தனகூடு ஊா்வலம்
திருமருகல் ஒன்றியம் வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தா்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த தா்காவில் கந்துரி விழா கடந்த ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா்
என்.கௌதமன் கலந்து கொண்டாா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. பள்ளிவாசலில் இருந்து வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊா்வலம் தா்காவை அடைந்ததும் வியாழக்கிழமை அதிகாலை சந்தனம் பூசம் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 15-ஆம் தேதி கொடி இறக்கப்படுகிறது.
சந்தனக்கூடு ஊா்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்வில் விழா கமிட்டி தலைவா் ஜியாவுதீன், செயலாளா் ஷேக்தாவூது, பொருளாளா் முகம்மது சா்ஜுன், ஜமாத் நிா்வாகிகள், ஜமாத்தாா்கள் கலந்து கொண்டனா்.