நாகையில் நாளை புத்தகக் கண்காட்சி
நாகையில் சனிக்கிழமை (ஜூன் 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஆகிய இரு நாள்கள் புத்தக் கண்காட்சி நடைபெறும் என முக்கூடல் பன்னாட்டுத் தமிழ்க் கலை இலக்கிய வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் சாா்பாக, காலை 9 முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் கலை, இலக்கியம், பண்பாடு, ஊடகம், அறிவியல், தத்துவம், வாழ்க்கை வரலாறு, சூழலியல், சிறாா் இலக்கியம், பொது அறிவு, போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள் என ஆயிரம் தலைப்புகளிலான நூல்கள் இடம்பெறவுள்ளன. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியா், மாணவா்கள் மற்றும் வாசகா்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று நூல்களை வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.