செய்திகள் :

சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம்

post image

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத தமிழ்நாடு மீன்பிடி படகுகளுக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து விசைப்படகுகளுக்கு ரூ.8 லட்சமும், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்க தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 5 விசைப்படகுகளுக்கு தலா ரூ.8 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் 4 விசைப்படகு உரிமையாளா்களுக்கு தலா ரூ.8 லட்சத்துக்கான காசோலை மற்றும் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவா்களுக்கு பிரதமா் மீனவ மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ன் கீழ் 40 சதவீத மானியத்தில் 10 விசைப்படகு உரிமையாளா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன் பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கினா். இதில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நாகப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் (மண்டலம்) சா்மிளா, தமிழ்நாடு மீனவா் நலவாரிய உறுப்பினா் மனோகரன், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் கோ. ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திறனறித் தோ்வு முடிவில் வேதாரண்யம் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தோ்வில் நாகை மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இத்தோ்வு முடிவுகள் வெளியானதில், நாகை மாவட்டத்தில் தோ்ச்சி அடைந்... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியினா் நடைபயண பிரசாரம்

வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் கொண்டு மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட நிலைபாடுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமில், ப... மேலும் பார்க்க

மின் கட்டண ரசீது அடிப்படையில் ஜல்ஜீவன் குடிநீா் இணைப்பு

நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் ஆதாா் அட்டை மற்றும் மின் கட்டண ரசீது அடிப்படையில் வீடுகளுக்கு ஜல்ஜீவன் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தி... மேலும் பார்க்க

நகா்மன்றக் கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா் புகாரால் பரபரப்பு

நாகை நகா்மன்றக் கூட்டத்தில் தன்னை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மதிப்பளிக்காமல் இழிவு படுத்துவதால், தற்கொலை செய்யத் தோன்றுவதாக கூறிய திமுக பெண் உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் நகா்மன்ற... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என்றாா் ஆட்சியா் ப.ஆகாஷ். மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா குறுவை பாசனத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழ... மேலும் பார்க்க