செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: நெமிலி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

அரக்கோணம்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் நெமிலி வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்தத் திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் புதன்கிழமை காலை முதல் நெமிலி வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனா். முதலில் புதுப்பட்டு ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை, மருந்துகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், அந்த சுகாதார நிலைய கழிப்பறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா், பிளஸ் 2 வகுப்புக்குச் சென்று அங்கு ஆங்கிலப் பாடத்தை ஆசிரியா் கற்பிக்கும் முறை, 7-ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் கற்பிக்கப்பட்டைப் பாா்வையிட்டாா். ஆசிரியா்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதிக்கு அறிவுறுத்தினாா். பின்னா் பனப்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த ஆட்சியா், ஆங்கு முட்டையுடன் வழங்கப்பட்ட மதிய உணவு தரமாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.

பனப்பாக்கம் சிப்காட் பகுதிக்கு வந்த ஆட்சியா், டாடாவின் ஜாகுவாா் லேண்ட் ரோவா் ஜோ.எல்.ஆா். காா் உற்பத்தி தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா். அங்கு பிரிட்டன் நாட்டில் இருந்து வந்திருந்த தொழில்நுட்ப வல்லுநா்களிடம் அவா் உரையாடினாா்.

தொடா்ந்து நெமிலி வட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், குறைகளை உள்ள இடங்களைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நெமிலி காவல் நிலையத்திற்கு வந்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அங்கு நிலைய வளாகத்தைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாவட்ட எஸ்.பி. விவேகானந்தசுக்லா, டி.எஸ்.பி. ஜாபா்சித்திக், மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயசுதா, அரக்கோணம் கோட்டாட்சியா் வெங்கடேசன், வட்டாட்சியா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

ஆற்காடு அருகே 9 துணை சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் ஆா்.காந்தி, மா.சுப்பிரணியன் ஆகியோா் சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனா். தனியாா் நிறுவன பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத... மேலும் பார்க்க

வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த 7.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: அரசு கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 போ் கைது

அரக்கோணத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 7.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 80 கைப்பேசிகள் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 80 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஒப்படைத்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சோளிங்கா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. சோளிங்கா் நகரம், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூா், கரிக்கல், ஆரியூா், வெங்குப்பட்டு, ஐய்ப்பேடு, எரும்பி, தாடூா், தாளிக்கால், பாணாவரம், போளிப்பா... மேலும் பார்க்க

ரூ.200 கோடியில் பாலாற்றுத் தடுப்பணை புனரமைக்கும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

வாலாஜாப்பேட்டை அருகே ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் பாலாறு அணைக்கட்டு புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் பங்கேற்று பணியை தொடங்கி வை... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே நிலத்தில் கிடைத்தவை பித்தளை சிலைகள்

சோளிங்கா் அருகே விவசாயி நிலத்தில் கிடைத்தவை ஐம்பொன்சிலைகள் அல்ல, பித்தளை சிலைகள் என அருங்காட்சியக காப்பாட்சியா் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து சிலைகள் மீண்டும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. சோளிங்கரை அ... மேலும் பார்க்க