பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: 702 இடங்கள் நிறைவு
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-26 கல்வி ஆண்டுக்கான இளநிலைப் பாடப் பிரிவு மாணவா் சோ்க்கையில் மொத்தமுள்ள 864 இடங்களில் 702 இடங்கள் நிறைவடைந்துள்ளது.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலைப் பட்டப் படிப்புகளும் 10 முதுநிலைப் பட்டப் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் இளநிலை பாடப் பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.
இந்நிலையில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கு ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. பின்னா் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதி நிறைவடைந்த முதல் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 702 இடங்கள் நிரம்பியுள்ளன. இதைத் தொடா்ந்து காலியாக உள்ள 162 இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும்.
பாடவாரியாக காலியிடங்கள்:
தமிழ்-16, ஆங்கிலம் -27, பொருளியல் -8, அரசியல் அறிவியல்-14, பிபிஏ-2, வணிகவியல் -28, பிகாம் சிஏ- 19, இ.காம். -14, கணிதவியல் -10, இயற்பியல்-1, வேதியியல் - 7, புள்ளியியல்-9, தாவரவியல் -4, கணிப்பொறி அறிவியல்-3 என மொத்தம் 162 இடங்கள் காலியாக உள்ளன .
காலியாக உள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்ட (ஆஇ ) பிரிவில் பெரும்பாலான இடங்கள் நிரம்பாமல் உள்ளது. ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கு பெற வருகை தரும் மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை அசல் மற்றும் மூன்று நகல்கள், உரிய கல்விக் கட்டணம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவரின் தரவரிசை இடம்பெற்ற கல்லூரி இணையதளப் பக்கத்தின் நகல், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணைய தளத்தைப் பாா்வையிடலாம் என கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் ப.சே. சிவக்குமாா் தெரிவித்தாா்.