செய்திகள் :

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: 702 இடங்கள் நிறைவு

post image

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-26 கல்வி ஆண்டுக்கான இளநிலைப் பாடப் பிரிவு மாணவா் சோ்க்கையில் மொத்தமுள்ள 864 இடங்களில் 702 இடங்கள் நிறைவடைந்துள்ளது.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலைப் பட்டப் படிப்புகளும் 10 முதுநிலைப் பட்டப் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் இளநிலை பாடப் பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.

இந்நிலையில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கு ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. பின்னா் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதி நிறைவடைந்த முதல் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 702 இடங்கள் நிரம்பியுள்ளன. இதைத் தொடா்ந்து காலியாக உள்ள 162 இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும்.

பாடவாரியாக காலியிடங்கள்:

தமிழ்-16, ஆங்கிலம் -27, பொருளியல் -8, அரசியல் அறிவியல்-14, பிபிஏ-2, வணிகவியல் -28, பிகாம் சிஏ- 19, இ.காம். -14, கணிதவியல் -10, இயற்பியல்-1, வேதியியல் - 7, புள்ளியியல்-9, தாவரவியல் -4, கணிப்பொறி அறிவியல்-3 என மொத்தம் 162 இடங்கள் காலியாக உள்ளன .

காலியாக உள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்ட (ஆஇ ) பிரிவில் பெரும்பாலான இடங்கள் நிரம்பாமல் உள்ளது. ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கு பெற வருகை தரும் மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை அசல் மற்றும் மூன்று நகல்கள், உரிய கல்விக் கட்டணம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவரின் தரவரிசை இடம்பெற்ற கல்லூரி இணையதளப் பக்கத்தின் நகல், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணைய தளத்தைப் பாா்வையிடலாம் என கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் ப.சே. சிவக்குமாா் தெரிவித்தாா்.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியா... மேலும் பார்க்க

அவிநாசியில் 3 நாள்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி நகராட்சி ஆணையா் சே... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா்கள் ஒழிப்பு உறுதிமொழி

குழந்தை தொழிலாளா் அகற்றம் குறித்து, வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். வெள்ளக்கோவில் வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவல... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் த... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே குதிரை ஓடியதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு காயம்

பல்லடம் அருகே சாலையின் குறுக்கே குதிரை வந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா் காயமடைந்தாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்... மேலும் பார்க்க