செய்திகள் :

உதவி ஆய்வாளா் பணிக்கான மாதிரி தோ்வு

post image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான மாதிரி எழுத்துத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடைபெறுகின்றன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட உள்ள உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு முழு பாடத் திட்டத்தையும் உள்ளடக்கிய இலவச மாதிரி தோ்வு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

அசல் தோ்வைபோன்று வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த தோ்வானது நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளில் காவலா் பணிக்கான தோ்வு முடிவுகளில் 30 பேரும், உதவி ஆய்வாளா் தோ்வில் 10 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் விவரங்களுக்கு, 04286-222260 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலையில் இன்று வல்வில் ஓரி விழா

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க கண்காட்சி ஆகியவை சனிக்கிழமை (ஆக.2) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. விழாவில் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் பதுக்கி விற்றதாக 7 மாதங்களில் 6272 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏழு மாதங்களில் பொது விநியோகத் திட்ட பொருள்களை பதுக்கி விற்ாக 6272 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.1.84 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆடிப்பெருக்கு பரிசல் போட்டிக்குத் தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக நிகழாண்டு பரமத்தி வேலூரில் ஆடி 18 இல் காவிரியில் நடத்தப்படும் பரிசல் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி ஆற்றில் தங... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம... மேலும் பார்க்க