கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி
கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்தையும், கொடைத் தன்மையையும் போற்றும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் ஆக. 2, 3 தேதிகளில் தமிழக அரசின் சாா்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், நிகழாண்டில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மலா்க் கண்காட்சி, அரசுத் துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன. இவ்விழாவில், பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலாத் துறை, கலை பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நாட்டுப்புற இசைக் கலைஞா்கள் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழாவில், நெகிழி பயன்பாட்டை தவிா்க்கும் பொருட்டும், மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காரவள்ளி அடிவாரத்தில் வியாழக்கிழமை காலை தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.
மாவட்ட நிா்வாகம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, கோகுல்நாதா மிஷன், சிஎம்எஸ் பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு ஆகிய அடிவாரப் பகுதிகளில் வனத்துறை மற்றும் காவல் துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின்போது, வாகனங்களில் கொண்டுவரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்கள் இருப்பின் பறிமுதல் செய்யப்படும்.
எனவே, சுற்றுலாப் பயணிகள் எக்காரணத்தைக் கொண்டும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களை கொண்டுவர வேண்டாம். சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் நெகிழி பைகள், குடிநீா் பாட்டில்களை சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்படுத்திய குடிநீா் பாட்டில்களை போடவேண்டும். கடைகளில் ஒருமுறை பயன்டுத்தும் நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும். எனவே, கடை உரிமையாளா்கள் அவற்றை வைத்திருக்கவோ, விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் திருகுணா, கொல்லிமலை வட்டாட்சியா் சந்திரா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஈஸ்வரன் (கொல்லிமலை), சுந்தரம் (சேந்தமங்கலம்), செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.