ரேஷன் பொருள்கள் பதுக்கி விற்றதாக 7 மாதங்களில் 6272 போ் கைது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏழு மாதங்களில் பொது விநியோகத் திட்ட பொருள்களை பதுக்கி விற்ாக 6272 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.1.84 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பண்டங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறான பொருள்களை சிலா் முறைகேடாக வாங்கி கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனா்.
அதைத்தடுக்கும் நோக்கில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலா்கள் தொடா் ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோா், அதற்கு உடந்தையாக செயல்படுவோா் மீது இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-இன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
2025 ஜன.1 முதல் ஜூலை 31 வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் மொத்தம் 6025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 2342 டன் பொது விநியோகத் திட்ட அரிசி, 13,720 லிட்டா் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய், 1725 சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் இதர 64 வழக்குகளுடன் அத்தியாவசியப் பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.1,84,41,328 ஆகும். இது தொடா்பாக 6,272 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்தலுக்கு, விற்பனைக்கு பயன்படுத்திய 1,362 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 2880 வாகனங்கள் அபராதத் தொகை செலுத்திய பிறகு அவை விடுவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தைத் தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 70 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனா். பொது விநியோகப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடா்பான புகாா் அளிக்க 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.