உத்தமபாளையத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் ஞானாம்பிகை கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, காலை 5.45 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, காலை 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு வைபவம், மாலை மாற்றுதல், கும்ப பூஜை, விஷேச ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, மாங்கல்ய பூஜையுடன் காலை 9 மணிக்கு வேத மந்திரங்கள்முழங்க மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பெண்கள் புதிய மாங்கல்யத்தை மாற்றிக்கொண்டனா்.
திருக்காளாத்தீஸ்வரா், தென்காளகஸ்தி சேவை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற அன்னதானத்தில் உத்தமபாளையம், கோகிலாபுரம் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.