துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; 'ஜீரோ' காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துற...
உப்பாற்று ஓடையில் இறந்து மிதந்த மீன்கள்
தூத்துக்குடி கோமஸ்புரம் அருகே உப்பாற்று ஓடையில் சனிக்கிழமை, மீன்கள் இறந்தநிலையில் மிதந்தன.
தூத்துக்குடியிலிருந்து தருவைகுளம் செல்லும் வழியில் கோமஸ்புரம் அருகே உப்பாற்று ஓடை உள்ளது. உப்பளங்களிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா், மழைநீா் இந்த ஓடை வழியாக கடலுக்குச் செல்லும், இந்த இந்த ஓடையில் சனிக்கிழமை ஏராளமான மீன்கள் உயிரிழந்து மிதந்தன. அவற்றைப் பொதுமக்கள் எடுத்துச் சென்றனா்.
கடந்த ஆண்டு, மீன் பதப்படுத்தும் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் இந்த ஓடை நீா் இளஞ்சிவப்பு நிறமாக இருந்தது. இதனால், 3 ஆலைகளின் செயல்பாட்டை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த ஓடையில் மீன்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.