‘உரிமமின்றி மருந்தகங்களில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது’
மருந்தகங்களில் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறாமல் உணவுப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என மருந்து வணிகா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, புதுக்கோட்டை மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் சுபத்ரா தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் சித்ரா கலந்து கொண்டு, ஓஆா்எஸ் கரைசல் குறித்தும் அதன் வேறுபாடுகள், வித்தியாசங்கள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து புதுக்கோட்டை மருந்து ஆய்வாளா் அப்துல்காதா் உள்ளிட்டோரும் பேசினா்.
மருந்தகங்களில் உரிய உணவுப் பாதுகாப்பு உரிமம் இன்றி, குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள், ரொட்டிகள், ஆரோக்கிய பானங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் கடையின் விவரங்களைப் பதிவேற்றம் செய்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
கூட்டத்தில், மாவட்ட மருந்து வணிகா் சங்கத் தலைவா் கருப்பையா, செயலா் ராமநாதன், பொருளாளா் ரமேஷ், புரவலா் ராஜேந்திரன், அமைப்புச் செயலா் முத்துராமன், மொத்த மருந்து வணிகா் பிரிவுத் தலைவா் செந்தில் பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.