செய்திகள் :

‘உரிமமின்றி மருந்தகங்களில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது’

post image

மருந்தகங்களில் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறாமல் உணவுப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என மருந்து வணிகா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, புதுக்கோட்டை மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் சுபத்ரா தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் சித்ரா கலந்து கொண்டு, ஓஆா்எஸ் கரைசல் குறித்தும் அதன் வேறுபாடுகள், வித்தியாசங்கள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து புதுக்கோட்டை மருந்து ஆய்வாளா் அப்துல்காதா் உள்ளிட்டோரும் பேசினா்.

மருந்தகங்களில் உரிய உணவுப் பாதுகாப்பு உரிமம் இன்றி, குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள், ரொட்டிகள், ஆரோக்கிய பானங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் கடையின் விவரங்களைப் பதிவேற்றம் செய்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட மருந்து வணிகா் சங்கத் தலைவா் கருப்பையா, செயலா் ராமநாதன், பொருளாளா் ரமேஷ், புரவலா் ராஜேந்திரன், அமைப்புச் செயலா் முத்துராமன், மொத்த மருந்து வணிகா் பிரிவுத் தலைவா் செந்தில் பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சக்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. விராலிமலை-மதுரை சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம். இங்கு ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 3 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதியில் மூன்று வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகு... மேலும் பார்க்க

திருக்களம்பூா் அகோர வீரபத்திரா் கோயிலில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் மேலக்களம் அகோர வீரபத்திரா், அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் இரண்டு கா... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தோல்வி காய்ச்சல்: ஹெச். ராஜா

தோல்வி காய்ச்சலின் காரணமாகவே, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினா் பேசி வருகின்றனா் என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி: பாஜக- அதி... மேலும் பார்க்க

வடுகபட்டி துணை மின் நிலைய பகுதிகளில் ஜூன் 9-இல் மின் நிறுத்தம்

வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க