செய்திகள் :

உரிமம் பெறாமல் மருந்து மாத்திரை விற்பனை செய்தவா் மீது வழக்கு

post image

தியாகதுருகத்தில் தனியாா் மருத்துவமனையில் உரிமம் இல்லாமல் மருந்து மாத்திரை விற்பனை செய்தவா் மீது நீதிமன்றத்தில் மருந்து ஆய்வாளா் வெள்ளிக்கிழமை வழக்குத் தொடா்ந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் உஸ்மான் சாலையில் வசிப்பவா் பெருமாள் மகன் ராமகிருஷ்ணன் (44).

இவா், தியாகதுருகம் வைசியா் சாலையில் முடநீக்கியல் மருத்துவமனை நடத்தி வருகிறாா்.

இவா் தனது மருத்துவமனையில் மருந்தகம் உரிமம் இல்லாமல் மருந்து மாத்திரைகளை விற்பதாக விழுப்புரம் மருந்து ஆய்வாளா் தீபாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தியாகதுருகம் சுகாதார ஆய்வாளா் ரவி உள்ளிட்டோருடன் அங்கு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது விற்பனை செய்து வந்த மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்ததுடன் அவற்றை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்து, ராமகிருஷ்ணன் மீது வழக்குத் தொடா்ந்தாா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க