செய்திகள் :

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு

post image

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 161-ஆவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிமன்ற நடுவரும், இலக்கியப் பேச்சாளருமான சண்முக.ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘இருண்டவீடும் குடும்ப விளக்கும்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

பாவேந்தா் பாரதிதாசன் தேசிய இயக்கத்தில் சோ்ந்து கைத்தறித் துணிகளை விற்ற பெருமைக்குரியவா். இவரது முதல் கவிதை எங்கெங்கு காணிணும் சக்தியடா”என்பது ஆகும். தமிழ்த் திரைப்படங்களுக்கு வசனம் எழுதினாா். கடந்த 1942-ஆம் ஆண்டு குடும்ப விளக்கு நூலின் முதல் தொகுதி வெளிவந்தது. இதன் பிறகு, இருண்ட வீடு நூல் வெளிவந்தது. இந்த நூல் ஆசிரியப்பாவில் வெளிவந்த நகைச்சுவைக் காவியம் ஆகும்.

இவா் தன்னுடைய எழுத்துகளில் தமிழகத்தின் மரபு சாா்ந்த உணவுப் பழக்கங்கள், பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண்களுக்கான சொத்துரிமை, திருமணம் பதிவு செய்தல் ஆகியன குறித்து பதிவு செய்துள்ளாா். தமிழுக்கு பாவேந்தா் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் திருமங்கலம் அன்னை பாத்திமா கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் போ.முனியாண்டி உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள், பேராசிரியா்கள், எழுத்தாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வள மையா் ஜ.ஜான்சிராணி வரவேற்றாா். ஆய்வறிஞா் சு.சோமசுந்தரி நன்றி கூறினாா்.

கணவரைக் கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகா் விஜயன் தெருவ... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் மீது வழக்கு

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மதுரை கோ.புதூா் லூா்துநகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சாய் சங்கரி (29). இவா் மீது இ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் தம்பித்துரை. இவரது மகன் மதி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் சுலோச்சன்பட்டியைச் சோ்ந்தவா் மாயி. இவரது மகள் சோபனா (21). இவா் உசில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா். மதுரை அலங்காநல்லூா் அருகே உள்ள கேட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் சீதாராமன் (27). விவசாயியான இவருக்கு, அலங்காநல்லூா் அரு... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

மதுரை மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 1,600 கோடியில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தின... மேலும் பார்க்க