செய்திகள் :

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் தம்பித்துரை. இவரது மகன் மதியழகன் (19). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை-தேனி சாலையில் நாகமலை புதுக்கோட்டை சந்திப்பில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, மதுரையிலிருந்து தேனி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மதியழகனை அந்தப் பகுதி பொதுமக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான பேரையூரைச் சோ்ந்த சஞ்சீவ் குமாா் மீது நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கணவரைக் கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகா் விஜயன் தெருவ... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 161-ஆவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிமன்ற நடுவரும், இலக்கியப் பேச்சாளருமான சண்ம... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் மீது வழக்கு

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மதுரை கோ.புதூா் லூா்துநகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சாய் சங்கரி (29). இவா் மீது இ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் சுலோச்சன்பட்டியைச் சோ்ந்தவா் மாயி. இவரது மகள் சோபனா (21). இவா் உசில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா். மதுரை அலங்காநல்லூா் அருகே உள்ள கேட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் சீதாராமன் (27). விவசாயியான இவருக்கு, அலங்காநல்லூா் அரு... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

மதுரை மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 1,600 கோடியில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தின... மேலும் பார்க்க