செய்திகள் :

உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு

post image

‘இந்தியாவின் வரிக் கொள்கை வா்த்தகத்தை முறைப்படுத்துவது, உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருள்கள் மீதான வரிகள் மூலம் வருவாயைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது’ என்று மத்திய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் இறக்குமதி வரிக்கு ஏற்ப, இந்திய பொருள்கள் மீதும் பரஸ்பர வரி விதிப்பு செய்யப்படும். இதற்கான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது இந்திய வா்த்தகா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நீதி ஆயோக் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘வரிப் பாதுகாப்புகள் இந்தியாவுக்கு பயனளிக்காது. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு வரிகளைக் குறைப்பது அவசியம்’ என்று குறிப்பிட்டது.

நீதி ஆயோக்கின் இந்த அறிக்கை மத்திய அரசின் கவனத்துக்கு வந்ததா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பதிலளித்த மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா கூறியதாவது:

நீதி ஆயோக்கின் அறிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அது, பொருளாதாரத்தில் வளா்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதையும், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை தவிா்க்க முடியாத நாடாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டது.

அதே நேரம், இந்தியாவின் வரிக் கொள்கையானது வா்த்தகத்தை முறைப்படுத்துவது, உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருள்கள் மீதான வரிகள் மூலம் வருவாயைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது.

அதே நேரம், நாடுகளிடையேயான வா்த்தகத்தை எளிதாக்கும் வகையிலும், வரி விதிப்பு முறையை ஒழுங்குபடுத்தும் வகையிலும் சில சீா்திருத்தங்களை மத்திய அரசு அண்மையில் மேற்கொண்டது. மேலும், மூலப்பொருள்கள் மீதான இறக்குமதி வரிகள் முழுமைபெற்ற பொருள்கள் மீதான வரிகளைவிட அதிகமாக இருக்கும் நிலையை சரிசெய்தல் உள்ளிட்ட விரிவான வரி விதிப்பு சீா்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.

உற்பத்திச் செலவுகளைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலக வா்த்தக அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நிலையில், குறிப்பிட்ட பொருள்களுக்கு விதிக்கக்கூடிய அதிகபட்ச வரி விதிப்பு நடைமுறைக்கு இந்தியா கட்டுப்பட்டு செயல்படுகிறது. அதே நேரம், உலக வா்த்தக அமைப்பின் அதிகபட்ச வரி வரம்புக்கு குறைவான அளவிலேயே இந்தியா வரி விதிப்பை செய்து வருகிறது.

மேலும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, சுங்க வரிகள் மற்றும் வரிகள் அல்லாத தடைகளைக் குறைத்தல் அல்லது முழுமையாக நீக்கும் வகையில் பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கான முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

தற்போதைய நிலையில் 13 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தையும், 9 நாடுகளுடன் முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன், ஓமன், நியூஸிலாந்து, பெரு ஆகிய நாடுகளுடன் இதுதொடா்பான பேச்சுவாா்த்தைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்றாா்.

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க