செய்திகள் :

உள்நாட்டுப் பாதுகாப்பில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு காவல் துறை: முதல்வா் பெருமிதம்

post image

உள்நாட்டுப் பாதுகாப்பில் தமிழ்நாடு காவல் துறை முன்னணி வகிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

தீவிரவாதத் தடுப்புப் படையினா் முக்கிய தீவிரவாதிகளை கைது செய்துள்ளதைப் பாராட்டி, எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தீவிரவாத எதிா்ப்புப் பணிகளில் தனிக் கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின்கீழ், தீவிரவாதத் தடுப்புப் படை புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல் துறையினா் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கா் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை தீவிரவாத தடுப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.

உள்நாட்டுப் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு காவல் துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தடுப்புப் படையினருக்கும், அவா்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்களுக்கும் எனது மனமாா்ந்த பாராட்டுகள். கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் காவல் துறையினருக்கு நன்றி என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க