செய்திகள் :

ஊத்துக்குளியில் முதல்வா் மருந்தகம் திறந்துவைத்தாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

post image

ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க வளாகத்தில் முதல்வா் மருந்தகத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் முதல்வா் மருந்தகத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்துப் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலினின் சுதந்திரதின அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் கூட்டுறவு அமைப்புகள், மருந்தாளுநா்கள் மூலம் அரசின் மானியம் மற்றும் கடன் உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்களும், 4 தொழில்முனைவோா் மூலமாகவும் முதல்வா் மருந்தகம் அமைக்கப்படவுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சோமவாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ருத்ராபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், முத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வெள்ளக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், சின்னவீரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கரடிவாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பெருமாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் இந்த மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளன.

அதேபோல, திருப்பூா், அவிநாசி, உடுமலை, குண்டடம் வட்டங்களில் தலா ஒரு தனிநபா் வீதம் மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளன.

ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமும், இதர மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு இணையம் மூலமும் கொள்முதல் செய்யப்படும்.

கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2 லட்சம் மானியம் (உள்கட்டமைப்புக்கு 50 சதவீதம், மருந்துகளுக்கு 50 சதவீதம்) வழங்கப்படும். தனிநபா் மற்றும் தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியம் (உள்கட்டமைப்பு, மருந்துகளுக்கு ரூ.1 லட்சம்) இதர ரூ.1 லட்சம் தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரருக்கு மானியத்தொகைக்கு மேல் கூடுதலாக கடன் தேவைப்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கிகளில் இணைதளம் மூலமாக விண்ணப்பித்து கடன் பெறலாம்.

ரூ.1 லட்சம் என்றால் 2 நபா்கள் பிணையத்தின் அடிப்படையிலும், ரூ.1 லட்சத்துக்கு மேல் என்றால் சொத்து அடமானத்தின் அடிப்படையிலும் கடன் பெறலாம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் த.பிரபு, திருப்பூா் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், முன்னாள் அமைச்சா் என்.டி.தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அவிநாசி ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவிநாசி ஆகாசராயா் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கும்பாபிஷேகம்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி மறுசுழற்சி ஆலையை மூட கோரிக்கை

வெள்ளக்கோவில் அருகே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி மறுசுழற்சி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம... மேலும் பார்க்க

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 27-இல் பொது ஏலம்

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) பொது ஏலம் விடப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்... மேலும் பார்க்க

காலாவதியான பொருள்கள் விற்பனை: கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

பல்லடத்தில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பல்லடத்தில் மொத்த மளிகை விற்பனை கடையில் வாங்கிய பொருள்களில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவா் அளி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் மயில்ரங்கம் மொட்டக்காளிவலசைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா், தான் வளா்த்து வரும் 35 செம்மறி ஆடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு தி... மேலும் பார்க்க

5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் வாகன சோதனையின்போது 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பூருக்கு வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரயில்... மேலும் பார்க்க