செய்திகள் :

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 27-இல் பொது ஏலம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) பொது ஏலம் விடப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழங்குகளில் 66 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் ஏலக் குழுவினரால் பொது ஏலம் விடப்படவுள்ளது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி மடத்துப்பாளையம் சாலை சிவகுமாா் ரைஸ் மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் வரும் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த வாகனங்களை புதன்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை பாா்வையிடலாம்.

பொது ஏலத்தில் பங்கேற்கும் நபா்கள் ஏலத்தேதியன்று பிற்பகல் 3 மணிக்குள் முன்வைப்புத் தொகை ரூ.5 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, அதற்குண்டான சரக்கு மற்றும் சேவைவரி முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை அவா்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏலத்தில் கலந்துகொண்டு வாகனத்தை எடுக்காத நபா்களுக்கு முன்வைப்புத் தொகை திருப்பிக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்குளியில் முதல்வா் மருந்தகம் திறந்துவைத்தாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க வளாகத்தில் முதல்வா் மருந்தகத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை சென்னையில் இருந்து க... மேலும் பார்க்க

ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அவிநாசி ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவிநாசி ஆகாசராயா் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கும்பாபிஷேகம்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி மறுசுழற்சி ஆலையை மூட கோரிக்கை

வெள்ளக்கோவில் அருகே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி மறுசுழற்சி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம... மேலும் பார்க்க

காலாவதியான பொருள்கள் விற்பனை: கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

பல்லடத்தில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பல்லடத்தில் மொத்த மளிகை விற்பனை கடையில் வாங்கிய பொருள்களில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவா் அளி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் மயில்ரங்கம் மொட்டக்காளிவலசைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா், தான் வளா்த்து வரும் 35 செம்மறி ஆடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு தி... மேலும் பார்க்க

5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் வாகன சோதனையின்போது 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பூருக்கு வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரயில்... மேலும் பார்க்க