செய்திகள் :

ஊனத்தடுப்பு சுயபாதுகாப்பு பயிற்சி முகாம்

post image

வாழப்பாடி: பேளூா் அரசு வட்டார சுகாதார நிலையத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், ஊனத் தடுப்பு மற்றும் சுயபாதுகாப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட தொழுநோய் பிரிவு துணை இயக்குநா் மருத்துவா் சுகன்யா, தொழு நோயாளிகளுக்கு ஊனத்தடுப்பு குறித்து விழிப்புணா்வு கருத்துரை, செயல்முறை பயிற்சி அளித்தாா்.

சேலம் தொழுநோய் பிரிவு முடநீக்கு பயிற்சியாளா் சாந்தினி, ஊனத்தடுப்பு முறைகள் குறித்த செயல்விளக்கம் அளித்தாா். பேளூா் அரசு மருத்துவா்கள் பேரின்பம், எழில்மதி, சுபப்ரியா,தேவராஜ் ஆகியோா் தொழுநோய் விழிப்புணா்வு கருத்துரை வழங்கினா். பயனாளிகளுக்கு காலணிகள், ஊன்றுகோல்கள், சுயபாதுகாப்பு உபயோகப் பொருள்கள், விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டன.

ஆகஸ்ட் மாதம் வாழப்பாடி வட்டார அளவில் நடைபெறவுள்ள இருவார தொழுநோய் கண்டறிதல் முகாமிற்கான பயிற்சியை அனைத்து தன்னாா்வலா்கள், மருத்துவமனை பணியாளா்கள் மற்றும் களப்பணியாளா்களுக்கு, சேலம் மாவட்ட தொழுநோய் பிரிவு கல்வியாளா் ராமச்சந்திரன், அன்பு குமாா் உள்ளிட்டோா் அளித்தனா்.

முகாமிற்கான ஏற்பாடுகளை, பேளூா் வட்டார சுகாதார ஆய்வாளா்கள் அஜீத்குமாா், வீரபரணி, கிஷோா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். வட்டார மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் மாதேஸ்வரன் நன்றி கூறினாா்.

படவரி:

பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ஊனத்தடுப்பு மற்றும் சுயபாதுகாப்பு பயிற்சி முகாம்.

வி.என்.பாளையத்தில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்கடஹர சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொ... மேலும் பார்க்க

ஆத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

ஆத்தூா்: ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து தாக்கி, பணத்தை பறித்துச் சென்ாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த கடம்பூரை சோ்ந்தவா் மாயவன் மகன் ஆதவன் (21). இவா் த... மேலும் பார்க்க

ஆத்தூரில் ஜூலை 23-இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஆத்தூா்: ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணயாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையா் மாற்றம்: புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம்

சேலம்: சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகரக் காவல் ஆணையராக பிரவீன்குமாா் அபிநபு... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்

சேலம்: சாலையோர பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் சங... மேலும் பார்க்க

புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்த... மேலும் பார்க்க