செய்திகள் :

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்

post image

சேலம்: சாலையோர பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அரசின் அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் சாலையோரப் பாதுகாப்பு சட்டம் 2014 இன் படி விற்பனை கமிட்டி அமைத்து மாதம் ஒருமுறைக் கூட்ட வேண்டும். சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி வங்கிகள் மூலம் ரூ. 50,000 கடன் வழங்க வேண்டும்.

சாலையோர வியாபாரிகள் பல ஆண்டு காலம் வியாபாரம் செய்துவரும் இடத்தை காலி செய்ய சொல்லி காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிா்வாகம் துன்புறுத்த கூடாது, நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் இலவச தள்ளுவண்டிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ. கோவிந்தன், மாவட்ட உதவித் தலைவா் எஸ்.கே. தியாகராஜன், மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.வெங்கடபதி, சங்க செயலாளா் பி. தனசேகரன், பொருளாளா் எஸ். காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வி.என்.பாளையத்தில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்கடஹர சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொ... மேலும் பார்க்க

ஆத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

ஆத்தூா்: ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து தாக்கி, பணத்தை பறித்துச் சென்ாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த கடம்பூரை சோ்ந்தவா் மாயவன் மகன் ஆதவன் (21). இவா் த... மேலும் பார்க்க

ஆத்தூரில் ஜூலை 23-இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஆத்தூா்: ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணயாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையா் மாற்றம்: புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம்

சேலம்: சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகரக் காவல் ஆணையராக பிரவீன்குமாா் அபிநபு... மேலும் பார்க்க

புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்த... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம்: தமிழக மக்களுக்காக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை எடுத்துக்கூறி உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திமுகவினருக்கு அறிவுறுத்தினாா். தமிழகம் ம... மேலும் பார்க்க