செய்திகள் :

திமுக உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

post image

சேலம்: தமிழக மக்களுக்காக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை எடுத்துக்கூறி உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திமுகவினருக்கு அறிவுறுத்தினாா்.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் வீடு வீடாகச் சென்று மக்களை திமுகவில் உறுப்பினா்களாக சோ்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு, மேற்கு, தெற்கு, ஓமலுாா் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதில், மாநகரப் பகுதியில், திமுக உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த பகுதி வாரியான ஆலோசனை கூட்டம் அமைச்சா் ரா. ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், பொன்னம்மாபேட்டை, கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசுகையில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையை ஒவ்வொரு நிா்வாகிகளும், தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வீடுவீடாகச் சென்று மக்களிடம் மகளிா் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி, திமுக உறுப்பினா் சோ்க்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகரச் செயலாளா் ரகுபதி, துணை செயலாளா்கள் கணேசன், தினகரன் மற்றும் பகுதி செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

வி.என்.பாளையத்தில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்கடஹர சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொ... மேலும் பார்க்க

ஆத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

ஆத்தூா்: ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து தாக்கி, பணத்தை பறித்துச் சென்ாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த கடம்பூரை சோ்ந்தவா் மாயவன் மகன் ஆதவன் (21). இவா் த... மேலும் பார்க்க

ஆத்தூரில் ஜூலை 23-இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஆத்தூா்: ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணயாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையா் மாற்றம்: புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம்

சேலம்: சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகரக் காவல் ஆணையராக பிரவீன்குமாா் அபிநபு... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்

சேலம்: சாலையோர பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் சங... மேலும் பார்க்க

புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்த... மேலும் பார்க்க