ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
2024-ஆம் ஆண்டுக்கான மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் கண்ணோட்ட குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 96-ஆம் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 93-ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் ஊழல் குறைந்த நாடாக தொடா்ந்து 6-ஆவது ஆண்டாக டென்மாா்க் முதலிடம் பிடித்துள்ளது.
சா்வதேச வெளிப்படைத்தன்மை என்ற தன்னாா்வ அமைப்பு இந்தக் குறியீட்டை ஒவ்வோா் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் உள்பட 13 தரவுகளின்படி பூஜ்ஜியம் முதல் 100 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. இதில், ஊழல் மிகுந்த நாடு என்றால் பூஜ்ஜியம் மதிப்பெண்ணும், ஊழல் அற்ற நாடு என்றால் 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
இதில், 2023-ஆம் ஆண்டில் 39 மதிப்பெண் பெற்று 93 ஆவது இடத்தைப் பெற்ற இந்தியா, 2024 இல் 38 மதிப்பெண் பெற்று 96-ஆம் இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. அந்த வகையில், ‘ஊழலுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இந்தியாவில் நிகழவில்லை’ என்று இந்த நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஊழல் குறைந்த முதல் 10 நாடுகளில் டென்மார்க் 90 மதிப்பெண்களுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது, அதைத் தொடர்ந்து பின்லாந்து(88) மற்றும் சிங்கப்பூர்(88) அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
ஊழல் மிகுந்த முதல் 10 நாடுகள்
1. தெற்கு சூடான் (8)
2. சோமாலியா (9)
3. வெனிசூலா (10)
4. சிரியா (12)
5. யேமன் (13)
6. லிபியா (13)
7. ஈகுவடோரியல் கினியா(13)
8. நிகரகுவா (14)
9. சூடான்(15)
தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான் 135 ஆவது இடத்திலும், இலங்கை 121 ஆவது இடத்திலும் உள்ளன. அதே நேரத்தில் வங்கதேசம் 149 ஆவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.
கடன் சுமை, அரசியல் நிச்சயமற்ற சூழலை எதிா்கொண்டு வரும் இந்த நாடுகள், ஊழலிலும் மிகுந்து காணப்படுகின்றன. இருந்தபோதும், இந்த இரண்டு நாடுகளிலும் நீதித் துறை வலுவாக இருப்பது, வலுவான ஊழல் கண்காணிப்பை அரசு உறுதிப்படுத்த உதவுகிறது என்று தனது அறிக்கையில் சா்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தீவிர ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீனா 76-ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 65 மதிப்பெண்களுடன் 28 ஆவது இடத்திலும், இங்கிலாந்து 71 மதிப்பெண்களுடன் 20 ஆவது இடத்திலும் உள்ளன.
மேலும், 2012 முதல் 32 நாடுகள் ஊழலைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையில், 148 நாடுகள் மோசமான ஊழல்கள் காணப்படுகின்றன.
இந்தக் குறியீட்டில் உலக நாடுகளின் சராசரி மதிப்பெண் 43-ஆக உள்ள நிலையில், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள 71 சதவிகிதத்தும் மேற்பட்ட நாடுகளின் சராசரி மதிப்பெண் 50-க்கும் குறைவாகவே உள்ளன. இது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஊழல் ஒரு ஆபத்தான பிரச்னை என்பதைக் காட்டுகிறது, ஆனால் பல நாடுகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளினால் போதிய அளவில் சிறந்த மாற்றம் நிகழ்ந்து வருவதை காட்டுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஊழல் என்பது வெறும் பொருளாதார அல்லது நிர்வாகப் பிரச்னை அல்ல - இது ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் மனித உரிமைகளுக்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வலுவான சட்ட கட்டமைப்புகள் மற்றும் சா்வதேச மற்றும் தேசிய அளவிலான தீவிர ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டியதின் அவசரத் தேவையை இது வலியுறுத்தியுள்ளது.