செய்திகள் :

எஃப்டிஐ விதிமுறைகள் மீறல்: பிபிசிக்கு ரூ.3.44 கோடி அபராதம்

post image

அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) விதிமுறைகளை மீறியதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் இந்திய கிளைக்கு அமலாக்கத் துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய அரசு அனுமதியின் கீழ், டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும்.

இந்நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் ஊடகமாக செயல்படும் பிரிட்டனின் பிபிசி நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதமாக குறைக்கப்படாமல், 100 சதவீதமாகவே நீடித்தது.

இதைத்தொடா்ந்து அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தைப் பல வழிகளில் மீறியது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிபிசியின் இந்திய கிளை, அதன் மூன்று இயக்குநா்கள், நிதிப் பிரிவுத் தலைவா் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து விதிமீறல் தொடா்பாக அந்த செய்தி நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை ரூ.3,44,48,850 அபராதம் விதித்துள்ளது. இதுதவிர, அந்த நிறுவனத்தின் 3 இயக்குநா்களுக்கும் தலா ரூ.1.14 கோடிக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க