மசோதாக்கள் மீது ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறோம்: உச்சநீத...
எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ‘ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' -கார்கே
பி. சுதர்ஷன் ரெட்டி ‘இந்தியாவின் ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி இன்று(ஆக. 19) தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரைக் குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:
‘குடியரசு துணைத் தலைவர் போட்டியானது ஒரு கொள்கை சித்தாந்த ரீதியிலான போராட்டம்.
இந்தநிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் பி. சுதர்ஷன் ரெட்டியை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான ஒருமித்த வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளோம்.
பி. சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் முற்போக்கான மதிப்பிற்குரிய நீதிமான்களில் ஒருவராவார். சட்டத்துறையில் நெடுங்காலம் திறம்பட பயணித்த அனுபவத்தைக் கொண்டவர். அவரது பணிக்காலத்தில் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி; குவஹாட்டி(அஸ்ஸாம்) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ; உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிய பொறுப்புகளை வகித்தவர். சமூக, பொருளாதார, அரசியல் நீதிக்காக தொடர்ந்து போராடும் துணிச்சலான சாதனையாளர்.
நமது நாட்டின் விடுதலை இயக்கத்தை வடிவமைத்த மாண்புகளை, எவற்றின் மீது நமது தேசத்தின் அரசமைப்பும் ஜனநாயகமும் நங்கூரமிட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, அந்த மாண்புகளை முழுமையாக அவர் பிரபலிப்பார்.
இந்த மாண்புகள் அனைத்தும் அச்சுறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நமது ஒருங்கிணைந்த தீர்க்கமான முடிவால் இந்தத் தேர்தலில் போராட வேண்டும்.’ இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.