செய்திகள் :

`எத்தனை மோடி, இரவிகள் வந்தாலும்... மக்களின் மொழி உணர்வை வீழ்த்த முடியாது!' - சு.வெங்கடேசன் காட்டம்

post image
தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எம்.பி வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

``தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் ஆளுநர் ஆர். என் ரவி கலந்துரையாடி இருக்கிறார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கின்றனர்.

சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன்

ஹிந்தியை எதிர்க்கிறோம் என எந்த தென்மாநில மொழிகளையும் கூட, படிக்க இளைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது" என்று தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது“ என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்.பி வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "மாநில மொழிகளை அழிக்கவும், அதிகாரத்தை பறிக்கவும் இந்துத்துவா கும்பலுக்கு அந்த தேவையுள்ளது. அதனை எதிர்த்து எங்களின் மொழியையும், உரிமையையும் காப்பாற்ற வேண்டியத் தேவை எங்களுக்கு உள்ளது. இந்த போரில் எத்தனை மோடிக்கள் வந்தாலும், எத்தனை இரவிகள் வந்தாலும் மக்களின் மொழி உணர்வை ஒரு போதும் வீழ்த்த முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.

USA -Ukraine: `சத்தமாக பேசுவதை நிறுத்துங்கள்' - வாக்குவாதத்தில் முடிந்த சந்திப்பு- என்ன நடந்தது?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட...உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மேலும், உக்ரைன் அதிபர் போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார் என்றும், அவருக்க... மேலும் பார்க்க

Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

நடிகை கொடுத்த பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசாரணையை முடித்துவிட்டு நள்ளிரவில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர்... மேலும் பார்க்க

ஆஜராகும் சீமான்; வளசரவாக்கத்தில் குவிந்த நாதக-வினர்... 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்க திட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் தாக்கல் செய்த பாலியல் புகார் வழக்கில், சீமானிடம் விசாரணை நடத்துமாறு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசார... மேலும் பார்க்க

`ஒரு பைசா கூட Pension வரல; இனியும் பொறுத்திருக்க முடியாது' Jacto Geo venkatesan | M K Stalin

Jacto Geo அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்மைப்பினர் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த கோரிக்கைகள் குறித்தும் அரசு அதை நிறைவேற்றாதது க... மேலும் பார்க்க

Siddaramaiah: `நம்மை பலவீனப்படுத்தும் முயற்சி' - தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்க சித்தராமையா அழைப்பு

நாடாளுமன்ற இடங்களுக்கான தொகுதி மறு சீரமைப்பு குறித்த மத்திய அரசின் ஆர்வத்தைக் கண்டித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. பாஜகவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் தென்னிந்திய மாநில மக்களுக்கு வழங்கப்படும்... மேலும் பார்க்க

`உயிர், உரிமை பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிறது; நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்!' - ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 3ஆம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.அதில் பேசியிருக்கும் ஸ்டாலின், "பொத... மேலும் பார்க்க