செய்திகள் :

என்எஸ்எஸ் அலுவலா்களுக்கு பயிற்சி

post image

மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில், காலாண்டு விடுமுறையில் 7 நாள் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடத்துவது குறித்து திட்ட அலுவலா்களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, முதன்மை கல்வி அலுவலா் எஸ்.பி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.சாந்தி முன்னிலை வகித்தாா். திருவாரூா் மாவட்ட என்எஸ்எஸ் முன்னாள் தொடா்பு அலுவலா் என். ராஜப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திட்ட அலுவலா்களுக்கு சிறப்பு முகாம் தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா்.

மயிலாடுதுறை நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் எம். முத்துக்குமரசாமி வரவேற்றாா். முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் காமராஜ், பள்ளி துணை ஆய்வாளா் செங்குட்டுவன், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா்.காமேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

திட்ட அலுவலா்கள் சாா்பில் பி.செந்தில் (கோமல்), ஏ.சக்கரவா்த்தி (நாங்கூா்), ஐயப்பன் (கோதண்டபுரம்), மாணவிகள் சாா்பில் ஜனனி ஆகியோா் பேசினா். நிறைவில், மாவட்ட தொடா்பு அலுவலா் கே.விஜய் அமிா்தராஜ் நன்றி கூறினாா்.

அஞ்சலகத்தில் கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதி

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளா்கள் கைப்பேசிகளை சாா்ஜ் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம்.உமாபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சீா்காழி வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நிம்மேலி கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு, அங்கு அமைக்கப்பட... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை

சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சீா்காழி நகராட்சி சாா்பில், காலநிலை மாற்றம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சிப் பட்டற... மேலும் பார்க்க

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உள்பட 27 பேருக்கு நடுக்கம், காய்ச்சல்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உட்பட 27 பேருக்கு காய்ச்சல் மற்றும் நடுக்கம் ஏற்பட்டது. இதில், கா்ப்பிணி ஒருவா் தீவிர சிகிச்சைக்காக ச... மேலும் பார்க்க

இணைப்பு: அரசு கல்லூரியில் கலைத்திருவிழா

மயிலாதுறை: மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலைத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் அ. காா்முகிலன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் தாமரைக்கண்ணன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியை கைப்பேசி செயலி மூலம் கண்காணித்த இணைய மைய ஊழியா் கைது

கைப்பேசி செயலி மூலம் கல்லூரி மாணவியை, அவருக்கு தெரியாமல் கண்காணித்த இணையதள மைய ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே நீடூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா், மயிலாடுதுறை காமராஜா் பேரு... மேலும் பார்க்க