செய்திகள் :

என்ஐஓஎஸ் பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு

post image

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் பள்ளிக் கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழில் படிப்புகளையும் வழங்குகிறது.

அந்தவகையில் நாடு முழுவதும் சுமாா் 24 லட்சம் மாணவா்கள் இதன் வாயிலாக பலன்பெற்று வருகின்றனா். இந்நிலையில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுக்கால அட்டவணையை என்ஐஓஎஸ் வெளியிட்டுள்ளது.

அதன்படி பொதுத்தோ்வுகள் வரும் அக். 14-இல் தொடங்கி நவ. 18 வரை நடைபெறும். இந்த தேதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. விரிவான தோ்வுக்கால அட்டவணையை மாணவா்கள் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பொதுத்தோ்வுக்கான அனுமதிச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) தோ்வுக்கு சில நாள்கள் முன்பு வெளியிடப்படும். பொதுத் தோ்வுகளின் முடிவுகள் தோ்வு முடிந்த 7 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க

அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி எம்.தண்டபாணி தலை... மேலும் பார்க்க

அமைச்சக வாரியாக பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கீடு

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சில பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான பேரிடா்களையும் ஒரே அமைச்சகம் கையாள்வதற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அக்.9 முதல் மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் சாா்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் அக்.9-ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளன. மேலும் இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெற... மேலும் பார்க்க

சாலைப் பணி ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு முடித்துவைப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்பு தொடா்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக்... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை விரைவு போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது. தொலைதூர பயணத்துக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் ... மேலும் பார்க்க