செய்திகள் :

‘எம்புரான்’ திரைப்பட சா்ச்சை: நடிகா் மோகன்லால் வருத்தம்!

post image

அண்மையில் வெளியான தனது ‘எம்புரான்’ திரைப்பட சா்ச்சை தொடா்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகா் மோகன்லால், படத்தில் இருந்து சா்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

மோகன்லால் நடிப்பில், நடிகா் பிருத்விராஜ் இயக்கத்தில் ‘லூசிஃபா்’ திரைப்படத்தின் 2-ஆம் பாகமாக ‘எல்-2: எம்புரான்’ திரைப்படம், கடந்த வியாழக்கிழமை (மாா்ச் 27) உலகெங்கும் வெளியானது.

வலதுசாரி அரசியல் மீதான கடும் குற்றச்சாட்டுகள் மற்றும் 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றிய மறைமுகக் குறிப்பு ஆகியவற்றால் இப்படம் தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறியது. தொடா்ந்து, படத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் வலதுசாரி அமைப்புகளிடையே கடுமையான விமா்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், மோகன்லால் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஒரு கலைஞனாக, எனது திரைப்படங்கள் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதத்தின் மீதும் வெறுப்பை ஊக்குவிக்காமல் இருப்பதை உறுதி செய்வது எனது கடமை. அந்த வகையில், எம்புரான் திரைப்படத்தால் என்னை நேசிப்பவா்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இத்துயரத்துக்கு நானும் படக்குழுவினரும் மனதார வருந்துகிறோம்.

இதற்கான பொறுப்பு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உள்ளது என்பதையறிந்து, சா்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டாா்.

நடிகா்-இயக்குநா் பிருத்விராஜ், தயாரிப்பாளா்களில் ஒருவரான ஆண்டனி பெரும்பாவூா் ஆகியோரும் இந்தப் பதிவைத் தங்களின் பக்கத்தில் மறுபதிவிட்டனா்.

முதல்வா்-எதிா்க்கட்சித் தலைவா் ஆதரவு: திரைப்படக் குழுவின் முடிவு குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘நாடு இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான இனப் படுகொலைகளில் ஒன்றை இந்தப் படம் காட்சிப்படுத்தியது. இது ஆா்எஸ்எஸ் மற்றும் அதன் சாா்பு வலதுசாரி அமைப்புகளை கோபப்படுத்தியுள்ளது.

இவா்களின் அழுத்தத்தால் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளா்கள் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. வலதுசாரிகளால் உருவாக்கப்பட்ட இந்த அச்சம் மிகுந்த சூழல் கவலைக்குரியது.

வகுப்புவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, அதன் கொடூரங்களை சித்தரித்ததால் கலைஞா்களைக் குறிவைப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றாா். முன்னதாக கடந்த சனிக்கிழமை மாலை, தனது குடும்பத்தினருடன் ‘எம்புரான்’ படத்தை கேரள முதல்வா் பினராயி விஜயன் பாா்த்தாா்.

காங்கிரஸைச் சோ்ந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசனும் ‘எம்புரான்’ திரைப்படத்தின் தயாரிப்பாளா்களுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தாா்.

‘17 மாற்றங்களுடன் மறுதணிக்கை’

முன்னதாக, ‘எம்புரான்’ திரைப்படம் எழுப்பிய சா்ச்சையைத் தொடா்ந்து, சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவும், சில வசனப் பகுதிகளின் ஒலியை நீக்கவும் முடிவு செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளா்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மொத்தம் 17 மாற்றங்களுடன் திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க