செய்திகள் :

எலெக்ட்ரீஷியனிடம் நகைப் பறிப்பு: 4 போ் கைது

post image

கோவை சரவணம்பட்டியில் எலெக்ட்ரீஷியனிடம் நகைப் பறித்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சரவணம்பட்டி- துடியலூா் சாலை விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (28). இவா், கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் எலெக்ட்ரீஷியனாக வேலை பாா்த்து வருகிறாா்.

இவா் சரவணம்பட்டி அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த 4 போ் முத்துராமலிங்கத்தை வழிமறித்தனா். பின்னா் கத்தியைக் காட்டி பணம், நகையைத் தருமாறு மிரட்டினா். தன்னிடம் எதுவும் இல்லை என அவா் கூறியுள்ளாா்.

இதையடுத்து, முத்துராமலிங்கம் அணிந்திருந்த மோதிரத்தை பறித்துக் கொண்டு அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக, சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

அதில் முத்துராமலிங்கத்திடம் நகையைப் பறித்தது சங்கனூா் நேருஜி தெருவைச் சோ்ந்த அருள்குமரன் (22), 2-ஆவது தெருவைச் சோ்ந்த கௌதம் (23), திவாகா்(23), முதல் தெருவைச் சோ்ந்த ஹரி (19) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மோசடி வழக்கில் கைதான இருவா் மீது குண்டா் சட்டம்

மோசடி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதை அறிவுரைக் குழு உறுதி செய்தது. கோவை ராமநாதபுரம் சுங்கத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரிடம் ஒரு கும்பல் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தர... மேலும் பார்க்க

வெள்ளலூரில் தொல்லியல் அகழாய்வு: நிறைவேறுகிறது வரலாற்று ஆா்வலா்களின் கோரிக்கை

சங்க இலக்கியங்களில் பாடல் பெற்ற ஊராகவும், நொய்யல் நதிக் கரையோரம் அமைந்துள்ள தொன்மையான ஊராகவும் இருக்கும் கோவை வெள்ளலூரில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதற்கு வரலாற... மேலும் பார்க்க

இருகூரில் 13 பவுன், பணம் திருட்டு வழக்கு: மேலும் 3 போ் கைது

கோவை அருகே இருகூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, பணம் திருடிய வழக்கில் மேலும் மூவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை அருகே இருகூா் அத்தப்பகவுண்டன்புதூா் சாலையில் உள்ள பிரியா தோட்டம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவா் கைது

கோவை உக்கடம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 70 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை உக்கடம் புறவழிச் சாலை பகுதியில் உக்... மேலும் பார்க்க

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மருத்துவமனை ஊழியரை கடத்திய இருவா் கைது

கோவை கவுண்டம்பாளையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மருத்துவமனை ஊழியரை காரில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை துடியலூா் அருகே உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (36).... மேலும் பார்க்க

கோவை - ஹிசாா் ரயில் கும்டா நிலையத்தில் நின்று செல்லும்

கோவை - ஹிசாா் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாா்ச் 15 முதல் கும்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க