செய்திகள் :

எளிய வணிகம் 2.0-க்கு அழைப்பு: ஜிஎஸ்டி 2.0 தவிா்ப்பு: பொருளாதார ஆய்வறிக்கை மீது காங்கிரஸ் விமா்சனம்

post image

பொருளாதார ஆய்வறிக்கையில் எளிய வணிகம் 2.0-வுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டி 2.0 மற்றும் அதிக வரி விதிப்பை ஒழிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் வெள்ளிக்கிழமை விமா்சித்தது.

பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வழக்கம்போல் இந்த முறையும் பொருளாதார ஆய்வறிக்கையின் தரவுகளை மத்திய அரசு மட்டுமே பெருமையாக கருதுகிறது.

பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, இயற்கை பாதுகாப்பு என பலவற்றையும் மேம்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன் என பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்.

பங்குச்சந்தை வெளிப்படைத்தன்மை: இந்திய பங்குச் சந்தையில் 11.5 கோடி போ் கணக்குகள் வைத்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்நிலையில் பங்குச்சந்தையில் நடைபெறும் ஊழல்களை கண்காணிக்கும் மத்திய அரசு மற்றும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (செபி) வெளிப்படைத்தன்மையுடன் செயல்படாமல் இருப்பது ஏன்?

அதிகரிக்கும் சீன இறக்குமதி: உற்பத்திசாா் ஊக்கத்தொகை திட்டம் (பிஎல்ஐ) போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை மத்திய அரசு செலவு செய்கிறது. இருப்பினும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு 2023-24-இல் ரூ.8.7 லட்சம் கோடியாக உள்ளது. இது வருங்காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வா்த்தக பற்றாக்குறை : மின்சார வாகனங்கள் துறையை பொருத்தவரை அதன் உற்பத்திக்கு தேவையான பொருள்களை இந்தியா, வா்த்தக பற்றாக்குறை அதிகம் வைத்துள்ள நாடுகளிடமிருந்தே இறக்குமதி செய்கிறது.

ஏற்றுமதி கொள்கை வெற்றி என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாப்பது மட்டுமின்றி அவற்றை மிகப்பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமாகவும் போட்டிகரமாகவும் செயல்பட வைப்பதே ஆகும்.

மத்திய அரசு அமைதி: எளிய வணிகம் 2.0-வை வெற்றிகரமாக மேற்கொள்ள மத்திய அரசு அழைப்பு விடுக்கிறது. ஆனால் ஜிஎஸ்டி 2.0, கடந்த பத்தாண்டுகளாக விதிக்கப்பட்ட அதிக வரியை (வரி பயங்கரவாதம்) ஒழிப்பது குறித்து எவ்வித தகவலும் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறவில்லை.

இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது.

அதேபோல் எளிய வணிகம் 1.0-இன்படி சுற்றுப்புறச்சூழல் மாசு மற்றும் ரசாயன மாசு போன்றவற்றால் ஏற்படும் பொது சுகாதாரக் கேடுகளில் இருந்து மக்களை காப்பதற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி குறித்தும் எந்த தகவலும் இடம்பெறவில்லை’ என குறிப்பிட்டாா்.

மணிப்பூா்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு - 5 பதுங்குமிடங்கள் அழிப்பு

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மேலும் 42 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், 5 பதுங்குமிடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்... மேலும் பார்க்க

தெலங்கானாவில் சுரங்க விபத்து: ரோபோக்கள் உதவியுடன் மீட்புப்பணி

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.என்ன நடந்தது?தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு 7 ஆக உயர்வு!

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்று(மார்ச் 2) மேலும் 3 உடல்கள் மீட்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை மோசடி: மாதபி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மாதபி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவோம்: சிவசேனை(உத்தவ்)

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் போதிய பலம் இல்லாதபோதும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை கட்சி (உத்தவ் பிரிவு) கோரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் தெரிவித்தா... மேலும் பார்க்க

பூனையின் மீதான அதீத அன்பால் ஒருவர் தற்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் வளர்ப்பு பூனையால் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹாவில் பூஜா (36) என்பவர், தனது பூனையை குழந்தைபோல வளர்த்து வந்த... மேலும் பார்க்க