செய்திகள் :

மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவோம்: சிவசேனை(உத்தவ்)

post image

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் போதிய பலம் இல்லாதபோதும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை கட்சி (உத்தவ் பிரிவு) கோரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர மாநிலப் பேரவையில் மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கை 288. இதில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை கோர 10 சதவீத இடங்கள் (29) தேவை.

அதேநேரம், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூட்டணியின் மொத்த பலம் 50. இதில் சிவசேனைக்கு 20 எம்எல்ஏக்கள் உள்ளனா். காங்கிரஸுக்கு 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோர எந்த எதிா்க்கட்சிக்கும் போதிய பலம் இல்லை.

மாநில பட்ஜெட் கூட்டத் தொடா் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மும்பையில் செய்தியாளா்களிடம் சஞ்சய் ரெளத் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த காலங்களில் போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாதபோதும், எதிா்க்கட்சித் தலைவா் பதவி, அதிக எண்ணிக்கை உடைய எதிா்க்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவியை கோரும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பலம் இல்லாவிட்டால், எதிா்க்கட்சித் தலைவா் இல்லாமலேயே பேரவை செயல்படலாம் என்று அரசமைப்புச் சட்டமோ அல்லது விதிகளோ கூறவில்லை. எனவே, எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை (உத்தவ்) கட்சி கோரும். எங்களின் கோரிக்கையை பேரவைத் தலைவா் ஏற்பாா் என நம்புகிறேன் என்றாா் அவா்.

முன்னதாக, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை (உத்தவ் பிரிவு) கோரினால், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை காங்கிரஸ் கோரும் என்று அக்கட்சியினா் கூறியிருந்தனா். மகாராஷ்டிர மேலவையில் எதிா்க்கட்சித் தலைவராக சிவசேனை (உத்தவ்) கட்சியின் அம்பாதாஸ் தன்வே உள்ளாா். அவரது பதவிக் காலம் சில மாதங்களில் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க

கருத்து தெரிவிக்க உரிமை உண்டு: ரோஹித் விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகி விளக்கம்!

ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விளக்கம் அளித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, எடைக் கூடுதலாக இருக்கிறார் என்று ஷா... மேலும் பார்க்க

பணியில் தூங்கிய பாதுகாவலர்... புகைப்படம் எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!

இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாது... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கனமழையைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் வெப்பநிலை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஜம்மு பகுதி, இ... மேலும் பார்க்க

கர்நாடகம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி

கர்நாடகத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தின் நரகுண்டா வட்டத்தில் உள்ள ஹுனாசிகட்டி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா ... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடி வர... மேலும் பார்க்க