செய்திகள் :

பங்குச்சந்தை மோசடி: மாதபி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

post image

மும்பை : மாதபி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் இதில் தொடர்புடைய 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிந்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்துள்ளார்.

இந்த நிலையில், மாதபி புச் ஊழலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் தொடா்பான வழக்கின் விசாரணை நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெறும் என்றும், அடுத்த 30 நாள்களுக்குள் வழக்கின் விசாரணை நிலை குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.28) நிறைவடைந்த நிலையில், புதிய தலைவராக மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலா் துஹின் காந்த பாண்டே வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியில் தூங்கிய பாதுகாவலர்... புகைப்படம் எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!

இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாது... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கனமழையைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் வெப்பநிலை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஜம்மு பகுதி, இ... மேலும் பார்க்க

கர்நாடகம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி

கர்நாடகத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தின் நரகுண்டா வட்டத்தில் உள்ள ஹுனாசிகட்டி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா ... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடி வர... மேலும் பார்க்க

முதல்வராகிறாரா சிவக்குமார்? கர்நாடக அமைச்சர், எம்எல்ஏக்கள் பேச்சால் சர்ச்சை!

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே, கர்நாடக காங்கிரஸில் உள்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில் அமைச்சரின் ... மேலும் பார்க்க

78 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பன் மறைவிட கிராமத்துக்கு மின்சாரம்!

நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு, பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.கர்நாடகம் - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலாறு ஹதி என்ற பழங்குடியின ... மேலும் பார்க்க