செய்திகள் :

சிதம்பரம்: பிரபல கொள்ளையன் கைது

post image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள விபீஷணபுரம் கோவிந்தசாமி நகரில் வசிக்கின்ற பட்டுசாமி மனைவி சுலபா என்பவர் வீட்டை பூட்டிவிட்டு மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்காக கடந்த பிப்.26-ம் தேதி இரவு நடராஜர் கோயிலுக்கு சென்று விட்டு மறு நாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்திருக்கிறார்.

பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 6 சவரன் தங்கச்சங்கிலி திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அண்ணாமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர் கே.அம்பேத்கர், உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர் மற்றும் காவலர்கள் மணிகண்டன், ராஜீவ் காந்தி, ரமணி, தமிழ்ச்செல்வன்,ஞானப்பிரகாசம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அண்ணாமலைநகரில் உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ச்சியாக கண்காணித்து விசாரணை மேற்கொண்டனர்.

கொச்சியில் பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் மர்ம மரணம்!

இதனையடுத்து விசாரணையில் 20 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சரித்திர பதிவேட்டில் உள்ள தில்லைகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த, கணேசன் மகன் ராஜேஷ் (40) என்பது தெரியவந்து அவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

மேலும் போலீஸார் அவரிடமிருந்து மதிப்பு ரூ ,3,60,000 மதிப்புள்ள, 6 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க