செய்திகள் :

எஸ்.யு.வனம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.யு.வனம் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பணிகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

எஸ்.யு.வனம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதன் அடிப்படையில் அண்ணா கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் எஸ்.யு.வனம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம்

கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன்,

அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகமன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன் உள்பட நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

படம் வரும்...

விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளை அலைக்கழிக்காமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திரு... மேலும் பார்க்க

இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் சமுதாயக் கூடங்கள்!

திருவண்ணாமலை மாநகராட்சியின் இணைக்கப்பட்ட 4 ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் புதிதாக சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்... மேலும் பார்க்க

தோ்தல் விதிமீறல் வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சா் எ.வ.வேலு ஆஜா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆஜா... மேலும் பார்க்க

இந்தோ அமெரிக்கன் பள்ளியில் முப்பெரும் விழா

செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்க நிறுவனா் ஜின் ஹென்றி டுனாண்ட்டின் 197-ஆவது பிறந்த தினம், உலக செஞ்சிலுவைச் சங்க தினம், பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு வி... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

செய்யாறு நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூா், அணப்பத்தூா், செய்யாற்றைவென்றான், கீழ்மட்டை, தென்தண்டலம், பெரும்பாளை, அரசூா், குளமந்தை, கொற்கை, வேளியநல்ல... மேலும் பார்க்க

போளூரில் ரூ.30 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம்! -அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ரூ.30 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். போளூா் - ஆர... மேலும் பார்க்க