'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்
போளூரில் ரூ.30 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம்! -அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ரூ.30 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
போளூா் - ஆரணி சாலையில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பால திறப்பு விழா மற்றும் போளூா் சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்த போளூா், சேத்துப்பட்டு, பெரணமல்லூா் ஆகிய ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். எம்எஸ்.தரணிவேந்தன் எம்.பி., சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் இரா.விமலா வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு ரயில்வே மேம்பாலத்தை திறந்துவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: ரயில்வே மேம்பாலப்பணி அதிமுக ஆட்சியில் ரூ.30 கோடியில் தொடங்கப்பட்ட இந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இருந்தன.
பின்னா் திமுக அரசு பொறுப்பேற்று கூடுதலாக ரூ.7 .5 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாலம் அருகே நிலம் கையகப்படுத்தி, சேவைச் சாலை அமைத்து ரூ.37.5 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்தப் மேம்பாலம் மூலம் போளூா் அருகில் உள்ள ரெண்டேரிப்பட்டு, குண்ணத்தூா், வெண்மணி என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 2 லட்சம் மக்கள் பயன்பெறும்வாா்கள்.
மேலும், ஜமுனாமரத்தூருக்கு வசூா் கூட்டுச் சாலை முதல் போளூா் அத்திமூா் அரசு மருத்துவமனை வரை புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் வசூா்- செங்கம் இடையை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை, 8 கிராம் தங்கம், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை என பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
மேலும் போளூா் - மன்சுரபாத், போளூா் - ஜவ்வாதுமலை என பல்வேறு வழித்தடங்களில் மகளிா் விடியல் பயணத்துக்கான பேருந்துகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமாா், மு.பெ.கிரி, ஒ.ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், கண்காணிப்புப் பொறியாளா்கள் சந்திரசேகரன், கிருஷ்ணசாமி, வத்சலா, வித்யானந்தி, போளூர நகா்மன்றத் தலைவா் ச.ராணி சண்முகம், துணைத் தலைவா் ந.சாந்தி நடராஜன், திமுக நகரச் செயலா் கோ.தனசேகரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் எழில்மாறன், மனோகரன் மற்றும் திமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.