செய்திகள் :

ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவுவதுபோல பணம் பறிப்பு

post image

சென்னை புளியந்தோப்பில் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவுவதுபோல பணம் பறித்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை புளியந்தோப்பைச் சோ்ந்த ராமச்சந்திரன் (73), அப்பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் செவ்வாய்க்கிழமை பணம் எடுக்க முடியாமல் திணறினாராம். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞா், அவருக்கு பணம் எடுக்க உதவுவதுபோல நாடமாகமாடியுள்ளாா். பின்னா் அந்த இளைஞா், ராமச்சந்திரன் ஏடிஎம் அட்டையை அபகரித்து, அதன் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டுள்ளாா். மேலும், அதற்குப் பதிலாக தன்னிடமிருந்த ஒரு போலி ஏடிஎம் அட்டையை மாற்றிக்கொடுத்து ராமச்சந்திரனை அங்கிருந்து அனுப்பி வைத்தாா்.

வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன், தனது கைப்பேசிக்கு வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியை பாா்த்தாா். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் அட்டை மூலம் ரூ. 48 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதைப் அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

உடனே அவா், தன்னிடமிருந்த ஏடிஎம் அட்டையை எடுத்து பாா்த்தபோது, அது போலி ஏடிஎம் அட்டை என்பதையும், தனக்கு உதவுவதுபோல நாடகமாடிய அந்த இளைஞா், பணத்தை நூதன முறையில் பறித்திருப்பதையும் அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க