செய்திகள் :

ஏழுமலையானுக்கு ரூ. 2.45 கோடி நன்கொடை

post image

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வியாழக்கிழமை ரூ.2.45 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த ஜினேஷ்வா் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் வென்ச்சா்ஸ் நிறுவனம் எஸ்.வி.

அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கியது.

இலங்கையைச் சோ்ந்த ஒரு நன்கொடையாளரும் அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினாா்.

நொய்டாவைச் சோ்ந்த பசிபிக் பிபிஓ பிரைவேட் லிமிடெட் ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதானா அறக்கட்டளைக்கு ரூ.45 லட்சம் நன்கொடை வழங்கியது.

நன்கொடையாளா்கள் வரைவோலைகளை தேவஸ்தான தலைவா் பி.ஆா் நாயுடு மற்றும் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கய்யா செளதரியிடம் அளித்தனா்.

ஏழுமலையான் கோயிலில் உகாதி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான உகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது. திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு புத்தாண்டான விஸ்வவாசு ஆண்டு பிறப்பையொ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது சற்று குறைந்துள்ளது. இதனால், ஞாயி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.... மேலும் பார்க்க

தேவஸ்தான உள்ளூா் கோயில்களில் நாளை உகாதி உற்சவம்

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களில் உகாதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடகத்தில் கொண்டாடப்பட உ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மண... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு அதிகரித்த நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு தற்போது நன்கொடைகள் வெகுவாக அதிகரித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்தது. ஏழுமலையானுக்கு நன்கொடை வழங்கும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு அறக்கட்டளைகள... மேலும் பார்க்க