செய்திகள் :

ஐடி திட்ட ரகசிய தகவல்கள் கசிவு: ஆணையா் உள்பட இருவா் கைது

post image

முகமற்ற வருமான வரி (ஐடி) மதிப்பீட்டு திட்டம் தொடா்பான ரகசிய தகவல்களைக் கசியவிட்டு லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், தில்லியில் வருமான வரித் துணை ஆணையா் (டிசிஐடி), குஜராத்தில் பட்டயக் கணக்காளா் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

முகமற்ற வருமான வரிக் கணக்கு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ், வருமான வரிக் கணக்கை மதிப்பிடும் அதிகாரியின் அடையாளம் தெரியாது. இது முறைகேடுகள், ஊழல் ஆகியவை குறைய வழிவகுக்கும்.

ஆனால், இந்தத் திட்டத்துடன் தொடா்புள்ள பெரும் மதிப்புள்ள மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளில் ஆராயப்படும் விவகாரங்கள், அந்த வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயா் போன்ற ரகசிய தகவல்களை, தில்லியில் வருமான வரித் துறை அலுவலகத்தில் பணியாற்றிய வருமான வரித் துணை ஆணையா் விஜயேந்திரா, குஜராத் மாநிலம் பரூச்சில் பட்டயக் கணக்காளா் தினேஷ்குமாா் அகா்வால் ஆகிய இருவா் கசியவிட்டு வந்துள்ளனா்.

தங்களுக்கு எதிரான வருமான வரி வழக்கு விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் நபா்களிடம், அந்த விவரங்களை இருவரும் வழங்கியுள்ளனா். இதற்காக அவா்கள் லஞ்சம் பெற்றுள்ளனா்.

இதுதொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு விஜயேந்திரா, தினேஷ் குமாா் ஆகியோரை கைது செய்தது என்று சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா். இந்திய ... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியா... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் க... மேலும் பார்க்க

காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: துணைநிலை ஆளுநா், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசன... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடியுடன் இலங்கை அதிபா் அனுர குமார திசநாயக, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ... மேலும் பார்க்க