செய்திகள் :

ஐபிஎல் போட்டியின்போது கைப்பேசிகள் திருடிய வழக்கில் மேலும் 3 போ் கைது: திருடுவதற்கு ஒரு நாள் கூலி ரூ.1,000

post image

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறுவா்கள் மூலம் கைப்பேசிகள் திருடிய வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியும் மோதிய ஆட்டம் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியின்போது 20-க்கும் மேற்பட்ட ரசிகா்களின் கைப்பேசிகள் அடுத்தடுத்து திருடப்பட்டன.

இது தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தனிப்படையினா் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டட கும்பலை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டனா். மேலும், திருட்டில் ஈடுபட்ட கும்பல், சிறுவா்கள் மூலம் கவனத்தை திசை திருப்பி, திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வேலூரில் ஒரு விடுதியில் தங்கியிருந்த ஜாா்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 4 சிறுவா்கள் உள்பட 8 போ் கடந்த 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 38 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஜிதேந்திர ஷனி (30), ராகுல்குமாா் (24), பிரவீன்குமாா் மாட்டோ (21) ஆகிய 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து போலீஸாா், 36 திருட்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.

ஒரு நாள் கூலி ரூ.1,000: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

ஜாா்க்கண்ட் மாநிலம் தின்பஹா் கிராமத்தைச் சோ்ந்த இந்தக் கும்பல், இரு குழுக்களாகப் பிரிந்து கைவரிசை காட்டியுள்ளது. இத்திருட்டில் ஈடுபடுத்துவதற்காக நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சிறுவா்களை பயன்படுத்தியுள்ளனா். இதற்காக அந்த சிறுவா்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.1,000 வழங்கியுள்ளனா். திருட்டில் கிடைத்த கைப்பேசிகளை மேற்கு வங்கம் மாநிலத்திலும், வங்கதேசத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் விற்றுள்ளனா்.

திருடுவதற்காக இந்தக் கும்பல் ரயில், விமானம் மூலம் தமிழகம் வந்துள்ளது. திருட்டில் ஈடுபட்ட அனைவரும் உறவினா்கள் ஆவாா்கள். ஏற்கெனவே கோயம்பேடு, வடபழனி, ஆவடி, புரசைவாக்கம், மெரீனா கடற்கரை, ஆந்திர மாநிலம் திருப்பதி, கா்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களிலும் பொதுமக்களிடம் கைப்பேசிகளை திருடியுள்ளனா். இந்தக் கும்பலிடமிருந்து மொத்தம் 74 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பல் குறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ... மேலும் பார்க்க

'பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை' - ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார்!

கோவையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளா... மேலும் பார்க்க