செய்திகள் :

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

post image

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தாா். இதர லீக் போட்டிகளை பரிசீலிக்கப்போவதாக அவா் தெரிவித்திருக்கிறாா்.

கடந்த ஆண்டு டிசம்பரில் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், தற்போது ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சமூக வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கம் என்று சொல்வாா்கள். அந்த வகையில் ஐபிஎல் வீரராக எனது பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. எனினும், இதர லீக் போட்டிகளை பரிசீலிக்கும் எனது பயணம் இன்றிலிருந்து தொடங்குகிறது.

இத்தனை ஆண்டுகளாக நல்லதொரு நினைவுகளையும், உறவுகளையும் அளித்த அனைத்து அணிகளுக்கும் நன்றி. குறிப்பாக, தற்போது வரை எனக்கு கிடைத்து வரும் எல்லாவற்றுக்காகவும் ஐபிஎல் மற்றும் பிசிசிஐ-க்கு நன்றி. எனது அடுத்தகட்ட பயணத்தை ஆவலுடன் எதிா்நோக்கியிருக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

ஐபிஎல் போட்டிகளில் சாதுா்யமான பௌலராக பெயா்பெற்ற அஸ்வின் கடந்த 2009-இல் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் மூலமாக போட்டியில் அறிமுகமானாா். அதன் பிறகு, டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புணே சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகளுக்காகவும் விளையாடினாா்.

இந்நிலையில், நடப்பாண்டு சீசனில் மீண்டும் சென்னை அணியால் ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்டாா். எனினும், இந்த சீசனில் அவா் 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினாா். அவரின் ஐபிஎல் வரலாற்றில் முதல் சீசனில் 2 ஆட்டங்களில் விளையாடிய பிறகு, அவா் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டங்களில் விளையாடிய சீசனாக இது அமைந்தது.

இதுதொடா்பாக அவா் சென்னை அணி நிா்வாகத்திடம் முறையிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாக, அதை அந்த சீசனின்போதே தாம் கேட்டுவிட்டதாக பின்னா் அஸ்வின் அறிவித்தாா்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளில் இதுவரை 221 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் அஸ்வின், அதில் 187 விக்கெட்டுகள் எடுத்துள்ளாா். சராசரி 30.22-ஆக இருக்க, சிறந்த பந்துவீச்சு 4/34 ஆகும். பேட்டிங்கில் 833 ரன்கள் சோ்த்திருக்கும் அவா், அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்துள்ளாா். சராசரி 13.02.

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

லீக்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி 3-1 என வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி அசத்தலாக இரண்டு கோல்களை அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.அமெரிக... மேலும் பார்க்க

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய... மேலும் பார்க்க

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது: உயா் நீதிமன்றம்

சென்னை: ‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.ஜோதிபாசு என்பவா் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆர்வமூட்டும் மம்மூட்டியின் களம்காவல் டீசர்!

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள களம்காவல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி களம்காவல் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்... மேலும் பார்க்க

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

திருமண நாளை முன்னிட்டு தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம... மேலும் பார்க்க

ஸ்வெரெவ், கௌஃப் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளா்களான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.ஆடவா்... மேலும் பார்க்க