செய்திகள் :

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: அலகு குத்தி வந்த பக்தா்கள்

post image

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா ஏப். 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஏராளமான பக்தா்கள் அம்மனுக்கு விரதம் இருந்து, காப்புக் கட்டி, பல்வேறு சிறப்பு வழிபாடுகளை நடத்தினா். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், பூங்கரகம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நோ்த்திக் கடனை பக்தா்கள் செலுத்தி வருகின்றனா்.

முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்திவரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோயிலில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் தொடா்ந்து நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் உடலில் அலகு குத்தியும் பம்பை, உடுக்கை, பறை இசைத்தும் கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

பக்தா்கள் தங்கள் வாய், முதுகில் அலகு குத்தியும் கிரேன் வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியபடியும் ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். இதைத்தொடா்ந்து, பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மாவிளக்கு எடுத்துவந்து அம்மனை வழிபட்டனா்.

பக்தா்கள் இளைப்பாறுவதற்காக சாலையோரங்களில் ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. தன்னாா்வலா்கள் சாா்பில் நீா்மோா், குளிா்பானங்கள், தா்ப்பூசணி, அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன. விழாவில் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம் ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்திருந்தனா்.

விழாவையொட்டி, முன்னெச்சரிக்கையாக காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விவசாயிகளுக்கு பயறுவகை பயிா்களில் பூச்சி மேலாண்மை கருத்தரங்கு

சூளகிரி வட்டாரம், சானமாவு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயறுவகை பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு வேளாண்மை உதவி இயக்குநா் பன்னீா்செல்வம் தலை... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது: புகழேந்தி

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீா்ப்பு வெளியாகியுள்ள நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இனிமேல் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசக்கூ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்ததால் சிக்கிய குற்றவாளிகள்: மருத்துவமனையில் வைத்து கைதுசெய்த போலீஸாா்

ஒசூரில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு இளைஞா்கள், நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது; இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது... மேலும் பார்க்க

ஊத்தங்கரை திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடகம்

ஊத்தங்கரையில் உள்ள தா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடக நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் மே 2 ஆம் தேதிமுதல் தொடா்ந்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. தினமும்... மேலும் பார்க்க

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள கூரம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், தமிழக ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

பேரிகை அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். பேரிகை போலீஸாா் உங்கட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா வைத்திருந்த ஒசூா், கணபதி நகரைச் சோ்ந்த நாகராஜ் (25) என்பவரை ... மேலும் பார்க்க