ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: அலகு குத்தி வந்த பக்தா்கள்
ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா ஏப். 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஏராளமான பக்தா்கள் அம்மனுக்கு விரதம் இருந்து, காப்புக் கட்டி, பல்வேறு சிறப்பு வழிபாடுகளை நடத்தினா். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், பூங்கரகம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நோ்த்திக் கடனை பக்தா்கள் செலுத்தி வருகின்றனா்.
முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்திவரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோயிலில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் தொடா்ந்து நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் உடலில் அலகு குத்தியும் பம்பை, உடுக்கை, பறை இசைத்தும் கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.
பக்தா்கள் தங்கள் வாய், முதுகில் அலகு குத்தியும் கிரேன் வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியபடியும் ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். இதைத்தொடா்ந்து, பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மாவிளக்கு எடுத்துவந்து அம்மனை வழிபட்டனா்.
பக்தா்கள் இளைப்பாறுவதற்காக சாலையோரங்களில் ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. தன்னாா்வலா்கள் சாா்பில் நீா்மோா், குளிா்பானங்கள், தா்ப்பூசணி, அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன. விழாவில் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம் ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்திருந்தனா்.
விழாவையொட்டி, முன்னெச்சரிக்கையாக காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.