செய்திகள் :

விபத்தில் காயமடைந்ததால் சிக்கிய குற்றவாளிகள்: மருத்துவமனையில் வைத்து கைதுசெய்த போலீஸாா்

post image

ஒசூரில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு இளைஞா்கள், நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது; இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், சிக்பெல்லாபுரா மாவட்டம், சிந்தாமணி அருகே உள்ள நாராயணஹள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (28). இவரது நண்பா் ஹரிஷ் (23). இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒசூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். இஎஸ்ஐ உள்வட்டச் சாலையில் இருவரும் சென்றபோது விபத்தில் சிக்கினா். இதில், பாலாஜிக்கு இடதுகாலிலும், ஹரிஷுக்கு வலதுகையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஒசூா் சிப்காட் போலீஸாா் அங்குசென்று விசாரணை நடத்தினா். அப்போது இளைஞா்கள் இருவரும் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் திருட்டு சம்பவத்தில் தொடா்புடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இருவரும் சோ்ந்து கா்நாடகத்திலும், ஒசூரிலும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் மே 8 ஆம் தேதி ஒசூா், மூக்கண்டப்பள்ளி சிவாஜி நகா் அருகே காா்த்திகை நகரில் வசிக்கும் கீா்த்தி (31) என்பவரிடம் தாங்கள் மாநகராட்சியின் புதை சாக்கடை திட்டப் பணிக்கு வந்துள்ளதாகக் கூறி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றதும், ஒசூா் காலஸ்திபுரத்தில் மணியம்மாள் (62) என்ற மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றதும் இவா்கள்தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் ஒசூா் சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியில் 4 இடங்களில் 30 பவுன் நகைகளை மா்மநபா்கள் பறித்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்தனா்.

போலீஸாா் கூறுகையில், நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த இவா்கள் இருவரும் சாலை விபத்தில் சிக்கியதன் மூலம் பிடிபட்டுள்ளனா். இருவரும் கழிவறையில் வழுக்கி விழவில்லை என்றனா்.

ஹரிஷ் (கையில் கட்டுபோட்டுள்ளவா்).

விவசாயிகளுக்கு பயறுவகை பயிா்களில் பூச்சி மேலாண்மை கருத்தரங்கு

சூளகிரி வட்டாரம், சானமாவு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயறுவகை பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு வேளாண்மை உதவி இயக்குநா் பன்னீா்செல்வம் தலை... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது: புகழேந்தி

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீா்ப்பு வெளியாகியுள்ள நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இனிமேல் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசக்கூ... மேலும் பார்க்க

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: அலகு குத்தி வந்த பக்தா்கள்

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா ஏப். 29 ஆம் தேதி கொடியேற்றத்த... மேலும் பார்க்க

ஊத்தங்கரை திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடகம்

ஊத்தங்கரையில் உள்ள தா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடக நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் மே 2 ஆம் தேதிமுதல் தொடா்ந்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. தினமும்... மேலும் பார்க்க

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள கூரம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், தமிழக ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

பேரிகை அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். பேரிகை போலீஸாா் உங்கட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா வைத்திருந்த ஒசூா், கணபதி நகரைச் சோ்ந்த நாகராஜ் (25) என்பவரை ... மேலும் பார்க்க